மயானப் பணியாளர்களுக்கு காப்பீடு திட்டம் இல்லை... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்...

கொரோனாவால் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

மயானப் பணியாளர்களுக்கு காப்பீடு திட்டம் இல்லை... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்...
பேரிடர் மேலாண்மை சட்டப்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
 
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சோலிசிட்டர், நிதிக்குழு வழங்கும் பணத்திலிருந்து தான் பேரிடர் மேலாண்மை நிதிக்கு பணம் ஒதுக்கப்படுகிறது. பேரிடர் நிவாரண நிதியை விநியோகிப்பது மாநிலங்கள்தான் என்று வாதிட்டார். கொரோனாவுக்கு நிதி வழங்க பல சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
 
மாநில அரசுகள் எந்த நிதியிலிருந்து எவ்வளவு நிவாரணம் வழங்கியுள்ளன என்ற நீதிபதிகளின் கேள்விக்கு பதில் அளித்த சோலிசிட்டர் ஜெனரல் மாநில அரசுகள், மாநில பேரிடர் நிதியிலிருந்து வழங்குவதாகத் தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்புப் பணிகளுக்கு செலவிட வேண்டியுள்ளது என்பதால் நிவாரணம் வழங்க இயலாத நிலை உள்ளதாக வாதிட்டார்.
மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு காப்பீடு வழங்குவதாகவும் தெரிவித்தார். மயானப் பணியாளர்களுக்கு காப்பீடு திட்டம் இல்லை என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து நிவாரணம் அனைவருக்கும் ஒரே சீராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தனர்.