10 நாட்களாக ஆட்டம் காட்டிய சிறுத்தையைப் பிடித்த அதிகாரிகள்...

10 நாட்களாக ஆட்டம் காட்டிய சிறுத்தையைப் பிடித்த அதிகாரிகள்...

மகாராஷ்டிரா | நாசிக்கில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கி உறுமிய காட்சிகள் வெளியாகியுள்ளன. தேவ்லாளி என்ற பகுதியில் கடந்த 10 நாட்களாக ஒரு சிறுத்தை மக்களை அச்சுறுத்தி வந்ததாகத் தெரிகிறது.

தொடர்ந்து அதனைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்த நிலையில், சிறுத்தை அதில் சிக்கியது. இந்நிலையில் மேலும் சில சிறுத்தைகளின் நடமாட்டம் இருக்கலாம் எனவும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கூண்டில் சிக்கிய சிறுத்தை கோவத்துடன் உறுமிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க | வளர்ப்பு நாயை வேட்டையாட துரத்தி செல்லும் சிறுத்தையின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள்...