நாடு முழுவதும் அதிகரிக்கும் ஓமிக்ரான் பாதிப்பு... மாநில அமைச்சர்களுடன் மத்திய  அமைச்சர் ஆலோசனை...

அதிகரிக்கும் ஓமிக்ரான் பாதிப்பை யொட்டி நாடு முழுவதும் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

நாடு முழுவதும் அதிகரிக்கும் ஓமிக்ரான் பாதிப்பு... மாநில அமைச்சர்களுடன் மத்திய  அமைச்சர் ஆலோசனை...

நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை யொட்டி, அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகம் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்.

அப்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழக சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொள்கிறார்.