மெட்ரோ ரெயிலில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி... நீண்ட வரிசையில் நின்ற பயணிகள்...

மெட்ரோ ரெயிலில் 50% இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி எதிரொலி - ரெயில் நிலையம் முன்பு நீண்ட வரிசையில் நின்ற பயணிகள்

மெட்ரோ ரெயிலில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி... நீண்ட வரிசையில் நின்ற பயணிகள்...

டெல்லியில் மெட்ரோ ரெயிலில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டதன் எதிரொலியாக, அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

டெல்லியில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் உள்ளிட்ட கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அங்கு மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, மெட்ரோ ரெயில்கள் 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச்செல்வதால், ராஜீவ் சவுக் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இதனால் குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.