பி.வி.சிந்துவுடன் ஐஸ்கிரீம் ருசித்த பிரதமர் மோடி..!!

பிரமதர் மோடி பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

பி.வி.சிந்துவுடன் ஐஸ்கிரீம் ருசித்த பிரதமர் மோடி..!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களை தனது இல்லத்திற்கு வரவழைத்து பிரதமர் மோடி விருந்தளித்தார். அப்போது வீரர்களுடன் உரையாடிய அவர், அவர்கள் பெற்றிருந்த பதக்கங்களையும் பார்வையிட்டு, பாராட்டினார்.

Image

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முன், பிவி சிந்துவுடன் உரையாற்றியிருந்த மோடி , ஒலிம்பிக் போட்டிக்கு பின் அவருடன் இணைந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக உறுதி அளித்திருந்தார்.

Image

அதன்படி பி.வி சிந்துவுக்கு அளித்த  வாக்குறுதியை மோடி நிறைவேற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுடன் அவர் ‘சுர்மா’ என்ற ஒருவகை இனிப்பு உணவினை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Image

இதனிடையே வரலாற்று சாதனை படைத்த ஆண்கள் ஹாக்கி அணியினர் கையொப்பமிட்ட ஹாக்கி மட்டையை மோடிக்கு பரிசளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.