ஸ்ரீநகரில் போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை... பயங்கரவாதிகள் அட்டூழியம்...

இது கோழைத்தனமான தாக்குதல் என அரசியல் கட்சிகள் கண்டனம்.

ஸ்ரீநகரில் போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை... பயங்கரவாதிகள் அட்டூழியம்...

ஜம்மு காஷ்மீரின் படாமல்லு பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், அப்பகுதியின் எஸ்.டி. காலனியில் வசித்து வந்த போலீஸ் கான்ஸ்டபிள் தவுசிப் அகமது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அவரது வீட்டின் அருகே நடந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பயங்கரவாதிகளால் போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இது கோழைத்தனமான தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளன.