சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன்; நாடு முழுவதும் காங்கிரஸ் தரப்பில் நாளை செய்தியாளர் சந்திப்பு!

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன்; நாடு முழுவதும் காங்கிரஸ் தரப்பில் நாளை செய்தியாளர் சந்திப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் தரப்பில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை யங் இந்தியன் என்ற நிறுவனத்தின் மூலம் முறைகேடாக கையகப்படுத்தியதாக சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் தரப்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.