ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல் பெரியகுளத்தில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்தநிலையில், மனைவியை பிரிந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறி, பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், துணைவியாரின் மறைவால், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரம்ப முடியாது என கூறியுள்ளார். அவரது லட்சியங்கள் மற்றும் மதிப்புகள் தொடர்ந்து குடும்பத்தை வழிநடத்தட்டும் எனவும், குடும்பத்தில் அமைதி திரும்ப இறைவனை வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.