தேர்தல் மும்முரம்: 16 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

தேர்தல் மும்முரம்: 16 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

கர்நாடகாவில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மத்திய பாஜக அரசு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது.

இதையும் படிக்க : 100 ரூபாய் வராத ஆத்திரத்தில் ஏடிஎம்க்கு கும்மாங்குத்து விட்ட வாலிபர்.. ! சுக்கு நூறாக நொறுங்கிய ஏடிஎம் இயந்திரம்..!

இந்த நிலையில் இன்று 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலைப் பணிகள் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக மதியம் 12 மணி அளவில் கர்நாடகா வரும் பிரதமர் மாண்டியா மாவட்டத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனால் மாண்டியா, தர்வாட் மாவட்டங்களில் பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.