ப்ளூ டிக்க பர்ஸ்ட் கொடுங்கடா... அப்பறமா தடுப்பூசி தாங்க! மோடியை கிண்டல் செய்த ராகுல்

ப்ளூ டிக்க பர்ஸ்ட் கொடுங்கடா... அப்பறமா தடுப்பூசி தாங்க! மோடியை கிண்டல் செய்த ராகுல்

நீல நிற டிக்குக்காகத்தான் மோடி அரசு போராடுகிறது என்றும் மக்களுக்கு தடுப்பூசி வேண்டுமென்றால் நீங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியதுதான் என மத்திய அரசை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.



துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில், பிரபலங்களை அடையாளப்படுத்த பயன்படுத்தி வரும் நீல நிற ‘டிக்’ குறியீட்டை டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது. இதனால் சமூக வலைத்தள வட்டாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. உடனடியாக டுவிட்டர் நிறுவனத்தை அதிகாரிகள் தொடர்பு கொண்டு அது குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த சம்பவத்தை மத்திய அரசு தடுப்பூசி திட்டத்துடன் தொடர்புபடுத்தி உள்ளது என ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘நீல நிற டிக்குக்காகத்தான் மோடி அரசு போராடுகிறது.மக்களுக்கு தடுப்பூசி வேண்டுமென்றால் அவர்களே  ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியதுதான்’ என குறிப்பிட்டு இருந்தார். இதற்காக ‘முன்னுரிமை’ என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தி இருந்தார்.