"சிறையில் ராகுல் புத்தகம் எழுத வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி.

"சிறையில் ராகுல் புத்தகம் எழுத வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி.

ராகுல்காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில்:-

”பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் ராகுல் காந்தி தங்களது கொள்கை என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டும். 

சீனாவிடம் இருந்து நம்முடைய நிலங்களை எப்படி மீட்க முடியும்?, அமெரிக்காவிடம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை பேச வேண்டுமே தவிர எப்போதும் கிண்டல் அடித்து கொண்டு ஜோக்கர் மாதிரி இருக்க கூடாது என்று விமர்சித்தார். 

 ராகுல்காந்தி 8 முறை வழக்கில் தோல்வி அடைந்து உள்ளார்.  ராகுல்காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும். இவ்வாறு அவர் விமர்சித்தார்.  

இதையும் படிக்க    | ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..!