சீனாவுடன் சண்டையிட்ட இந்திய வீரர்களின் துணிச்சல் குறித்து ராஜ்நாத் சிங் பெருமிதம்

சீனாவுடன் சண்டையிட்ட இந்திய வீரர்களின் துணிச்சல் குறித்து ராஜ்நாத் சிங் பெருமிதம்

இந்தியா சீனா மோதல் தொடர்பான முழுமையான விவரங்கள் தெரிந்தால் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் பெருமிதத்தில் பெருகும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா இடையிலான லடாக் எல்லை பதற்றம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் மிகத்தீவிரமாக இருந்தது. அப்போது எல்லையில் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையிலான கைகலப்பு, பிறகு மோதலாக வெடித்தது. அதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்தியா சீனா மோதல் குறித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவுடன் நேருக்கு நேர் நின்று இந்திய வீரர்கள் துணிச்சலுடன் சண்டையிட்ட விதம் குறித்து பெருமை தெரிவித்தார்.

இந்தியா சீனா மோதலின் முழுமையான தகவலை வெளியிட முடியாது என்றும் அது தெரிந்தால் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் பெருமிதத்தில் பெருகும் எனவும் கூறினார்.