2023ம் ஆண்டு இறுதியில் இது நிச்சயம் நடக்கும்!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும் என, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

2023ம் ஆண்டு இறுதியில் இது நிச்சயம் நடக்கும்!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும் என, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசு அமைத்த, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை, கோவிலை கட்டி வருகிறது. இந்நிலையில், அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருவதாக தெரிவித்துள்ள அறக்கட்டளை,  இந்த கட்டுமான பணிகள் முடிந்து, 2023 ஆம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசினத்துக்காக கோவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டுக்குள் முடியும் என்றும் கூறப்படுகிறது.