ராம்லீலா மைதானத்தில் ராவண வதம் நிகழ்ச்சி... அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு...

ராவண வதம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

ராம்லீலா மைதானத்தில் ராவண வதம் நிகழ்ச்சி... அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு...

டெல்லி ராம்லிலா மைதானத்தில் நடைபெற்ற ராவண வதம் செய்யும் நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். ராமாயண கதாபாத்திரங்களின் வேடமணிந்து வந்தவர்கள் போர்க்களக் காட்சிகளை நடித்துக் காட்டினார். இதனைத் தொடர்ந்து இராமன் அம்பினால் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதே போல் பீகார் தலைநகர் பாட்னாவில் ராவண வதம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ராமர், லட்சுமணன் போன்று வேடமிட்டு வந்த பக்தர்கள் பத்து தலை ராவணன் உருவ பொம்மையை அம்பிட்டு எரித்தனர். இந்த நிகழ்ச்சியில் ராவணன் உருவ பொம்மையுடன் சேர்த்து கொரோனா உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் ராவணன், இந்திரஜித் மற்றும் கும்பகர்ணன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. ராமன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் வேடமணிந்து வந்த பக்தர்கள் மூன்று உருவ பொம்மைகளையும் தீயிட்டு வதம் செய்தனர். இதேபோல பஞ்சாப் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராவண வதம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.