தாய்மாமன் மகனுடன் பேசியதால் ஆத்திரம்.. இளம்பெண்களை கொடூரமாக தாக்கிய உறவினர்கள்.! 

தாய்மாமன் மகனுடன் பேசியதால் ஆத்திரம்.. இளம்பெண்களை கொடூரமாக தாக்கிய உறவினர்கள்.! 

மத்திய பிரதேசத்தில், தாய்வழி மாமன் மகனுடன் பல மணி நேரம் செல்போனில் உரையாடிய இரு இளம்பெண்களை உறவினர்கள் சரமாரியாக அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தை சேர்ந்த இரு இளம்பெண்கள் அண்மையில் தங்களுக்கு அறிமுகமான தாய்வழி மாமன் மகனுடன் செல்போனில் உரையாடியதாக தெரிகிறது. இதனை மறைந்திருந்து கண்டுபிடித்த உறவினர்கள் அவர்களை பொது இடத்திற்கு அழைத்து வந்து, முடியை பிடித்து இழுத்து குச்சியால் சரமாரியாக தாக்கினர். இந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, இளம்பெண்களை தாக்கியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.