என்னை விடுவித்து விடுங்கள்... பிரஷாந்த் கிஷோர் கோரிக்கை...

முதல்வரின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரிக்கை

என்னை விடுவித்து விடுங்கள்... பிரஷாந்த் கிஷோர் கோரிக்கை...

பஞ்சாப் மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கை வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் கடந்த மார்ச் மாதம் பணியமர்த்தப்பட்டார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வெடுக்க போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தனது ஓய்வு முடிவின் காரணமாக முதன்மை ஆலோசகர் பொறுப்பை தன்னால் ஏற்க முடியாது என்றும், இந்த பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறும் அமரீந்தர் சிங்கை பிரசாந்த் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.