உலகெங்கிலும் இருக்கும் மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு ரூ.1.12 லட்சம் போனஸ் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் அனைத்து ஊழியர்களுக்கும், கொரோனா போனஸாக 1.12 லட்சம் ரூபாயை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் இருக்கும் மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு ரூ.1.12 லட்சம் போனஸ் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் அனைத்து ஊழியர்களுக்கும், கொரோனா போனஸாக 1.12 லட்சம் ரூபாயை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் நிதிநெருக்கடியில் சிக்கி முடங்கி உள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. 

கார்ப்பரேட் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும், இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது. நிரந்தர பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, பகுதி நேரமாக, மணிக் கணக்கின் அடிப்படையில் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது.

மேலும், இந்த போனஸ், அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி; உலகெங்கிலும் இருக்கும் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.  இந்நிறுவனம், 21 நாடுகளில் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.