குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் - பிரியங்கா

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் - பிரியங்கா

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பெங்களூருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, கர்நாடகாவில் ஊழல் மலிந்து விட்டதாக புகார் தெரிவித்தார்.

மேலும், பா. ஜ.க. ஆட்சியில் பொது மக்களின் வாழ்க்கை மேம்படவில்லை குற்றம்சாட்டிய அவர், வாழ்வில் மாற்றம் வேண்டும் எனில் தேர்தலுக்கு முன்பு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.