ரூ.2 கோடி அறிவித்த ரயில்வே நிர்வாகம்... மீராபாய்சானுவின் வெற்றிக்கு பரிசு...

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ரயில்வே துறை 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கியுள்ளது.

ரூ.2 கோடி அறிவித்த ரயில்வே நிர்வாகம்... மீராபாய்சானுவின் வெற்றிக்கு பரிசு...
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முன்பு, ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராக வேலைப்பார்த்து வந்தவர் மீராபாய் சானு.
 
இந்த நிலையில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றதை பாராட்டி ரயில்வே துறை அவருக்கு 2 கோடி ரூபாய் பரிசளித்துள்ளது. இதற்கான காசோலையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீராபாய்  சானுவிடம் வழங்கினார்.
 
இதே போல் மீராபாய் சானுவை பாராட்டி அம்மாநில அரசு அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.