ஜூலை 17-ம் தேதி சபரிமலை நடை திறப்பு... 21ஆம் தேதி வரை ஆனிமாத பூஜை...

சபரிமலையில் ஆனி மாத பூஜைக்காக வரும் 17-ம் தேதி முதல் 21 தேதி வரை 5 நாட்களுக்கு நடை திறக்கப்படுகிறது.

ஜூலை 17-ம் தேதி சபரிமலை நடை திறப்பு... 21ஆம் தேதி வரை ஆனிமாத பூஜை...
கேரளாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு ஒரே நேரத்தில் 15 பேர் வழிபாட்டுத் தலங்களுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக வரும் 17-ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடை திறக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களையும், கொரோனா  பாதிப்பு இல்லை என சான்று வாங்கியவர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க  தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. ஒரு நாளைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த  5 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிபட உள்ளனர்.