கனமழை காரணமாக சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய தடை விதிப்பு...

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய தடை விதிப்பு...

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதன்படி, முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் வருகிற 21-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் கேரளாவில் 19-ந் தேதி வரை கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால்  19-ந் தேதி வரை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.