நவம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும்..

தலைநகர் டெல்லியில் நவம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என கெஜ்ரிவால் அரசு தெரிவித்துள்ளது.

நவம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும்..

தலைநகர் டெல்லியில் நவம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என கெஜ்ரிவால் அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்ட பள்ளிகளை மாநிலங்கள் படிப்படியாக திறந்து வருகின்றன. டெல்லியிலும் தொற்று எண்ணிக்கை குறைந்ததால், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் மருத்துவ நிபுணர்களின் அறிவுரைக்கு இணங்க, நர்சரி முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை  திறக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் பல்வேறு கட்டங்களாக தொடக்க மற்றும் நடுநிலை நிலை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என டெல்லி அரசு கூறியுள்ளது.