சிறையில் உள்ள ஆர்யன் கானை நேரில் சந்தித்தார் ஷாரூக் கான்

போதைப்பொருள் தடுப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ள ஆர்யன்கானை, அவரது தந்தையும் நடிகருமான ஷாரூக்கான் நேரில் சந்தித்துள்ளார்.

சிறையில் உள்ள ஆர்யன் கானை நேரில் சந்தித்தார் ஷாரூக் கான்

போதைப்பொருள் தடுப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ள ஆர்யன்கானை, அவரது தந்தையும் நடிகருமான ஷாரூக்கான் நேரில் சந்தித்துள்ளார்.

மும்பையில் இருந்து கோவாவுக்கு அண்மையில் சென்ற சொகுசு கப்பலில், போதை விருந்து நடைபெற்றது. இதுதொடர்பாக ஷாரூக்கான் மகன் ஆர்யன்கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

 இதில் ஆர்யன்கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இரு முறை ஜாமீன் கேட்டு முறையிட்டும் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. இந்தநிலையில், சிறையில் வாடும் மகனை பார்ப்பதற்காக ஷாருக்கான் இன்று அச்சிறைக்கு சென்றுள்ளார்.

அவர் சில நிமிடங்கள் மகனுடன் பேசியதாக கூறப்படுகிறது. ஆர்யன் கானுக்கு ஜாமின் கேட்டு, மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், மகனுக்கு, ஷாரூக் கான் ஆறுதல் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.