ஊடகத்தின் விசாரணையை எதிர்கொள்ள விரும்பவில்லை... ஷில்பா ஷெட்டி

ஊடகங்கள் நடத்தும் விசாரணையை தான் விரும்பவில்லை என நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ஊடகத்தின்  விசாரணையை எதிர்கொள்ள விரும்பவில்லை... ஷில்பா ஷெட்டி

செல்போன் செயலிகள் வாயிலாக கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டதாக ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது வீடு, அலுவலகங்களை போலீசார் சோதனை செய்து, ஷில்பா ஷெட்டிக்கு இதில் தொடர்புள்ளதா எனவும் விசாரிக்கின்றனர். ஆனால் கணவர் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஷில்பா ஷெட்டி, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கணவர் விவகாரம் நீதித்துறை முன் விசாரணையில் இருப்பதால் அதுகுறித்து பதிலளிக்க விரும்பவில்லை என கூறிய அவர், ஊடகங்களின் விசாரணையை தான் எதிர்கொள்ள விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு,  ஒரு தாயாக தங்களின் தனி உரிமைக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.