பல லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தல்...! பறிமுதல் செய்த போலீசார்...!

பல லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தல்...! பறிமுதல் செய்த போலீசார்...!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பெனுமுரு மண்டலம், பேனுமுரு தேவலாம்பேட்டா சாலையில் உள்ள கொட்டரோடு அருகே டி.எஸ்.பி. சுதாகர் ரெட்டி தலைமையில் சித்தூர் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மத்தைய்யா ஆச்சாரி, பெனுமுரு எஸ்.ஐ.எம்.அனில் குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நேந்திர குண்டாவிலிருந்து தேவலாப்பேட்டை நோக்கி சென்று கொண்டுருந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது ஒரு காரில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தொலைவில் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவர் தப்பி ஓடினர். 

இந்நிலையில் மற்றொரு காரில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா, படவேடு கிராமத்தை சேர்ந்த பி.வெங்கடேஷ் என்பவரை கைது செய்து, காரில் இருந்த ₹ 50 லட்சம் மதிப்புள்ள 520 கிலோ எடைக்கொண்ட 28 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ₹ 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தவகையில் வெங்கடேசன் அளித்த தகவலின்படி மற்றொரு காரில் இருந்து தப்பியோடிய இருவரும் கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ராஜூ, ஜெகன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தப்பி ஒடிய இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டி.எஸ்.பி சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.