முர்முவை சந்தித்த சோனியா...!!!!

முர்முவை சந்தித்த சோனியா...!!!!

நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசு தலைவரை மரியாதை நியமித்தமாக குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. 

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்மு அவர்களை மரியாதை நியமித்தமாக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய குடிமை பணிகளில் உள்ள மூத்த அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர்.  அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-வை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சோனியா காந்தி அவர்களின் உடல் நலம் குறித்து குடியரசுத் தலைவர் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குடியரசு தலைவர் மாளிகையில் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாஜக கோட்டையை கைப்பற்றுவாரா கெஜ்ரிவால்!!!