ஈஸ்டர்...! இந்தியாவெங்கும் சிறப்பு பிரார்த்தனைகள்...!!

ஈஸ்டர்...! இந்தியாவெங்கும் சிறப்பு பிரார்த்தனைகள்...!!

கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் நள்ளிரவில் கிறிஸ்தவ ஆலயங்களில் ஏராளமான கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டுள்ளனா். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து மூன்றாம் நாள் அவா் சாவில் இருந்து உயிருடன் எழுந்ததை குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருவிழா ஈஸ்டா் பண்டிகையாகும். இந்த பண்டிகை உலகம் முழுவதும் இன்று வெகு விமாிசையாக கொண்டாடப்படவுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டுள்ளனா்.

அதன் ஒருபகுதியாக ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி மனமுருகி பிராா்த்தனையில் ஈடுபட்டுள்ளனா். 

இதேபோல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தேவாலயத்தில் நடந்த ஈஸ்டா் பண்டிகை சிறப்பு பிராா்த்தனையில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று கைகளில் மெழுகுவா்த்திகளை ஏந்தி வழிபாடு நடத்தியுள்ளனா். இதைப்போன்று மும்பையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து சிறப்பு பிராா்த்தனை செய்யப்பட்டது. Easter 2022: Easter Dates And Ideas To Celebrate At Home

மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தியவாறு நின்று பிராா்த்தனையில் ஈடுபட்டுள்ளனா்.