ஜம்மு மற்றும் நேபாலை குலுக்கிய திடீர் நிலநடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!
ஜம்மு காஷ்மீர் மற்றும் நேபாளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7ஆக பதிவாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் பகுதியில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பஹல்காமில் இருந்து 64 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் நேபாள தலைநகர் சங்குநாராயண் கோயில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். அதிகாலை சுமார் இரண்டரை மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 4 புள்ளி 7 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.