மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.. என்ன விஷியம்?

1400 க்கும் அதிகமான மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதற்கு மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.. என்ன விஷியம்?

மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த அதர்வ் என்ற மருத்துவர் தனக்கு இடம் ஒதுக்கப்படாததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற கோடைகால சிறப்பு அமர்வு நீதிபதி எம் .ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 1,456 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதை கண்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவர்களுக்கான இடங்கள் உரிய முறையில் ஒதுக்கித் தரப்படவில்லை என்றால் நீதிமன்றமே அதனை செய்ய நேரிடும் என்றும் இதற்கான இழப்பீட்டை வழங்க உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவ்வளவு காலியிடங்கள் இருந்திருக்கிறது என தெரிந்தும் அதனை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததற்கு நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.

அதிகாரிகளின் பொறுப்பில்லாத செயல்பாடுகளால் எவ்வளவு மாணவர்களும் பெற்றோர்களும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.