காங்கிரஸிலிருந்து விலகினார் பிரபல பெண் தலைவர்..!
அசாம் மாநிலத்தில் திடீர் திருப்பமாக, மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்த சுஷ்மிதா தேவ், அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் திடீர் திருப்பமாக, மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்த சுஷ்மிதா தேவ், அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அண்மையில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அவரது செயலை ஆதரித்து, சுஷ்மிதா தேவ் உள்ளிட்டோரும் சிறுமியின் பெற்றோருடன் ராகுல் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்பிக்கள் சிலரது டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டு, மீண்டும் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக அசாம் மகளிர் காங்கிரஸ் அணி தலைவியான சுஷ்மிதா தேவ் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக கட்சியின் வாட்ஸ்அப் குழுவிலிருந்து விலகிய அவர், தனது டிவிட்டர் முகப்பு பக்கத்திலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.