"தமிழிசை செளந்தரராஜன் சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார் " - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.

"தமிழிசை செளந்தரராஜன் சர்வாதிகாரி போல  செயல்பட்டு வருகிறார் " -   புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.

மாநிலங்களை டம்மி ஆக்கிவிட்டு, மாநிலத்தின் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க மோடி அரசு முயன்று வருகிறது என  புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். 

புதுச்சேரி மாநில அரசு மற்றும் முதல்வர் ரங்கசாமியின் அதிகாரத்தை தமிழிசை செளந்தரராஜன் பறித்துள்ளார் என்றும் ஆளமுடியவில்லை என்றால் முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து  அவர் பேசுகையில்:-  

" மத்தியில் மோடி அரசு மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றது அதன் ஒரு பகுதியாகத்தான் மருத்துவப்படிப் பிற்கு பொதுக்கலந்தாய்வு முறையை கொண்டு வருகின்றார்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாணவர்கள் அங்கேயே மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. 

அதே போன்று செவிலியர் படிப் பிற்கான நுழைவுத்தேர்வு நடத்துகின்றது. இதிலிருந்து தெள்ளத்தெளிவாக தெரிகின்றது மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுகின்றது  இது குறித்து தமிழக முதல்வ குரல் கொடுக்கின்றார். ஆனால் இதை எதிர்த்து ரங்கசாமி பேச மறுக்கின்றார் இதை எதிர்த்து போராட ரங்கசாமிக்கு தெம்பு உள்ளதா என கேள்வியெழுப் பிய நாராயணசாமி

ரங்கசாமியின் அதிகாரத்தை தமிழிசை செளந்தரராஜன் பறித்துள்ளார். அதன் வெளிப்பாடு தான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என அழுது புலம்புகின்றார் இது கபட நாடகம் என்றும் அரசியலமைப்பு சட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சருக்கு அதிகாரம் உள்ளது புலம்ப வேண்டியதில்லை என்றும் சர்வாதிகாரி போல தமிழிசை செளந்தரராஜன் செயல்பட்டு புதுச்சேரி நிர்வாகத்தை சீர்குழைக்கின்றார். 

ஆனால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநருக்கு சேவகம் செய்கின்றார். இதிலிருந்து இவர்கள் ஆளத்தகுதியில்லாதாவர்கள் என்பது தெளிவாகின்றது மேலும் ஆளத்தகுதியில்லை என்றால், முடியவில்லை என்றால் முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு போக வேண்டியது தானே தெரிவித்த நாராயணசாமி

புதுச்சேரி நகர அமைப்புக்குழுவின் அனுமதியில்லாமல் பத்திரப்பகுதி நடைபெறுகின்றது. கோயில் நிலங்கள் அரசு நிலங்கள் போலி பத்திரம் பதிவு செய்து ஆட்சியாளர்கள் மோசடி செய்து வருகின்றார்கள். இதை முதல்வர் ரங்கசாமி விசாரிக்க வேண்டும். இல்லையெனில் சி. பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி சார் பில் சி. பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம்",  என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க  | மம்தா சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது...!காரணம் என்ன?