20 ஆண்டு வளர்ச்சி வீணானது..  கண்ணீர்விட்ட ஆப்கானிஸ்தான் எம்.பி.,

இந்தியா திரும்பிய ஆப்கானிஸ்தான் எம்.பி கண்ணீருடன் 20 ஆண்டு வளர்ச்சி வீணானதாக வேதனை தெரிவித்தார்.

20 ஆண்டு வளர்ச்சி வீணானது..  கண்ணீர்விட்ட ஆப்கானிஸ்தான் எம்.பி.,

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அங்கிருந்து வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாது, சொந்த நாட்டு மக்களும் வெளியேறி வருகின்றனர். அங்கு தலிபான்களின் அராஜக போக்கு மீண்டும் தலைதூக்கியுள்ளதால், உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  

இந்த நிலையில் அங்கு சிக்கி தவித்த 107 இந்தியர்கள் உட்பட  168 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு இந்திய ராணுவத்துக்கு சொந்தமான விமானம் மூலம் காசியாபாத் வந்தடைந்தனர். இதனிடையே மரண பயத்திலிருந்து, மீட்டு வந்து தங்க அடைக்கலம் கொடுத்த இந்திய அரசுக்கு ஆப்கான் மக்கள் நன்றி தெரிவித்தனர்.  

அங்கு நிலவும் மோசமான நிலை குறித்து பேசிய ஆப்கான் எம்.பி நரேந்தர் சிங் ஹால்சா கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் ஒன்றுமில்லாமல் முழுவதுமாக தகர்க்கப்பட்டதாக கண்கலங்கினார்.