இரு சக்கரம் வாகனம் பெட்ரோல் போட திரும்ப முயன்ற போது பயங்கர விபத்து.. சிசிடிவி காட்சிகள்!!

இரு சக்கரம் வாகனம் ஒன்று பெட்ரோல் போட சாலையின் வலதுபுறம் திரும்ப முயன்ற போது பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இரு சக்கரம் வாகனம் பெட்ரோல் போட திரும்ப முயன்ற போது பயங்கர விபத்து.. சிசிடிவி காட்சிகள்!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே சிற்றாரிப்பறம்பு சாலையில் கடந்த சனிக்கிழமையன்று சாலையின் இடது புறமாக வந்துகொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் பெட்ரோல் நிரப்புவதற்காக ,பெட்ரோல் பம்பை நோக்கி வலது புறமாக திரும்பியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு சக்கரத்தில் இருந்த இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.