ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... மூன்று இடங்களில் தொடர் தாக்குதல் ...

ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஒருவர் பலியான நிலையில், மற்றொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... மூன்று இடங்களில் தொடர் தாக்குதல் ...

ஸ்ரீநகரில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் பயங்கரவாதிகளை, ஜம்மு காஷ்மீர் போலீசுடன் இணைந்து பாதுகாப்புப்படை வீரர்கள் வேட்டையாடி வருகின்றனர். இருந்த போதிலும் அவர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. இந்நிலையில், கரா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயம் அடைந்த ஒருவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட, அங்கு எந்த பயங்கரவாதியும் சிக்கவில்லை. இந்த தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்தில் பட்மாலூ என்ற பக்கத்து இடத்தில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. இதில் காயம் அடைந்த முகமது ஷஃபி தார், மோசமான நிலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 3-வதாக அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பதுங்கு குழி மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.