11 முறை மாற்றி மாற்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட  84 வயது முதியவர்!!!.

பீகார் முதியவர் ஒருவர் பத்தே மாதங்களில் அடையாள அட்டையை மாற்றி மாற்றி 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக கூறியுள்ளார்.

11 முறை மாற்றி மாற்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட  84 வயது முதியவர்!!!.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் சிலருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி கிடைக்காமல் இருந்து வரும் நிலையில் பீகாரை சேர்ந்த 84வயதான முதியவர் ஒருவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாதேபுரா மாவட்டத்தின் உதகிஷுங்கஞ்ச் பகுதிக்குட்பட்ட  புரைனி காவல் நிலையத்தின் ஓரை கிராமத்தில் வசிக்கும் பிரம்மதேவ் மண்டல் என்பவர் தனது 12வது டோஸ் எடுக்க முயன்றபோது பிடிப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட பீகார் மாநில சுகாதாரத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தனது முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட அந்த முதியவர் பின்னர் டிசம்பர் 30ஆம் தேதி வரை 11 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் சரியாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.