ஏர் இந்தியா விமான நிறுவனத்தை  டாடா நிறுவனம் வாங்கியதாக  வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு...

80 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை  டாடா நிறுவன குழுமம் வாங்கியதாக  வெளியான  தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை  டாடா நிறுவனம் வாங்கியதாக  வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு...

மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வந்த நிலையில் அதனை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆரம்பத்தில் ஏர் இந்தியாவை வாங்க எந்த நிறுவனமும் முனைப்பு காட்டாத நிலையில், டாடா குழுமமும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனர் அஜய் சிங்கும் ஏர் இந்தியாவை வாங்க போட்டி போட்டினர். ஏர் இந்திய விமான  நிறுவனம்  ஏலம் விடப்படும் எனவும்  மத்திய அரசு சார்பில்  தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்த நிலையில்  80 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவித்த  ஏர் இந்திய  விமான நிறுவனத்தை  டாடா  குழுமம்  பைப்பற்றியதாக  தகவல்கள் வெளியாகின.  ஆனால்  இந்த தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.  இது தவறான தகவல் எனவும் ஏர் இந்தியா நிறுவன ஏலம் குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மத்திய முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறை செயலர் தெரிவித்துள்ளார்.