காவிரி-குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது... கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை...

காவிரி-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது... கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை...

திருப்பதியில் நடைபெற்ற தென் மாநிலங்களின் வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், காவிரி நீரை பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில், காவிரி நீரை பயன்படுத்தி காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த சட்டத்தில் இடமில்லை என்றும், இதனால் காவிரி-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ள பசவராஜ் பொம்மை, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறி, உபரிநீரை பயன்படுத்தி பெரிய அளவில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.