செல்பியால் கோபமடைந்த காங்கிரஸ் கட்சி தலைவர்...

செல்பியால் கோபமடைந்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார்

செல்பியால் கோபமடைந்த காங்கிரஸ் கட்சி தலைவர்...

அனுமதியின்றி தம்முடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்ற தொண்டரை, கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார் தடுத்து நிறுத்திய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார், மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனையடுத்து, வெளியேறிய அவரிடம் செல்பி எடுக்க முயன்ற தொண்டர், தமது செல்போனை அவரது முகத்திற்கு முன்பாக நீட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார், உடனடியாக தொண்டரின் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தி, செல்பி எடுக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார். தொண்டரின் கைகளில் என்ன இருந்தது என தமக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ள அவர், ராஜீவ் காந்திக்கு என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும் என்றும், சில நேரங்களில் மனிதர்களின் கோபம் வெளிப்படுவதில் தவறு ஏதும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.