கட்டுப்பாட்டை தளர்த்தியது அமெரிக்கா...  நவம்பர் 8-ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகள் செல்லலாம்...

முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.

கட்டுப்பாட்டை தளர்த்தியது அமெரிக்கா...  நவம்பர் 8-ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகள் செல்லலாம்...

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவு இருந்ததால், போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. அந்நாட்டின் தரைவழி எல்லைகள் மூடப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா மற்றும் இதர பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. இது நவம்பர் 8-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும், இந்த அறிவிப்பானது சர்வதேச விமான பயணம் மற்றும் தரைவழி பயணம் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் எனவும், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெவின் முனோஸ் கூறியுள்ளார்.