அசாம் வெள்ளத்தில் சிக்கி 71 பேர் உயிரிழப்பு.. மீட்புப் பணியின் போது 2 போலீசார் உயிரிழந்த சோகம்!!

அசாம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

அசாம் வெள்ளத்தில் சிக்கி 71 பேர் உயிரிழப்பு.. மீட்புப் பணியின் போது 2 போலீசார் உயிரிழந்த சோகம்!!

அசாமில் தொடர்ந்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதோடு சாலை போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தால் 33 மாவட்டங்களில் மொத்தம் 42 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கம்பூர் மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பகுதிகளில் ஈடுபட்டிருந்த துணை ஆய்வாளர் சமுஜ்ஜல் ககோடி மற்றும் காவலர் ராஜீவ் பர்டோலி ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.