“கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” - டி.கே.சிவக்குமார்

“கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” -  டி.கே.சிவக்குமார்

கர்நாடகாவில் நீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று டி. கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் காவிரியில் இருந்து நீர் திறக்க மத்திய அரசு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா முதலமைச்சர்  சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் டி. கே.சிவக்குமார், அமைச்சர்கள் மற்றும்  நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி. கே.சிவக்குமார்,

"தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது போல கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்",  என்று டி. கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க   |  "காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்" - அண்ணாமலை குற்றச்சாட்டு!