மருந்து தொழிற்சாலையில் செப்பு வையர்கள் திருட்டு...! சிசிடிவி கேமராவில் பதிவு..!

புதுச்சேரியில் தனியார் மருந்து நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான செப்பு வையர்களை திருடி சென்ற ஓட்டுனர் மற்றும் ஒப்பந்த ஊழியரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்

மருந்து தொழிற்சாலையில் செப்பு வையர்கள் திருட்டு...! சிசிடிவி கேமராவில் பதிவு..!

புதுச்சேரி, பெரிய காலாபட்டு பகுதியில் இயங்கி வருகிறது தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை. இங்கு கடந்த 19 ஆம் தேதி அன்று 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான செப்பு வையர்கள் திருடப்பட்டுள்ளதாக மருந்து தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி செல்வகுமார் என்பவர் காலாபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒப்பந்த ஓட்டுநர் சசிகுமார், டாடா ஏஸ் வாகனத்தில் இருந்த செப்பு வையர்களை தொழிற்சாலை உள்ளிருந்து மதில் வழியாக வெளியே வீசுவது பதிவாகி இருந்தது. மேலும் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டதில் சசிகுமார் வீசிய வையர்களை வெளியே இருந்த மற்றொரு ஒப்பந்த ஊழியரான ஜெகதீசன் பெற்று கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக உள்ள இருவரையும் காலாபட்டு போலீசார் மற்றும் கிழக்கு குற்ற பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.