சட்டம் படிக்காமலே நீதிமன்றத்தில் வாதாடிய பெண்... போலீசார் வலைவீச்சு

கேரளாவில் சட்டம் படிக்காமலே இரண்டு வருடம் வழக்கறிஞராக பணியாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சட்டம் படிக்காமலே நீதிமன்றத்தில் வாதாடிய பெண்... போலீசார் வலைவீச்சு

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஜெசி சேவியர். இவர் சட்டம் படிக்காமலேயே போலியாக பார் கவுன்சிலில் பதிவு செய்து, கடந்த 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஜெசி சேவியர் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்நிலையில் ஜெசி சேவியர் மீது பார் கவுன்சிலுக்கு, அவர் சட்டப்படிப்பு முடிக்கவில்லை என புகார் கடிதம் வந்துள்ளது.

இந்த புகாரை ஏற்ற பார் கவுன்சில் நடத்திய விசாரணையில் அவர் வேறு ஒரு வழக்கறிஞரின் பதிவு எண் மூலம் பயிற்சி மேற்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து ஜெசி சேவியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பெயரில் போலீசார் ஜெசி சேவியரை விசாரிக்க தேடும் போது தப்பிச்சென்று தலைமறைவாகிவிட்டார்.