சீன எல்லையில் பிரச்சனை... முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களிடம் முப்படை தளபதிகள் விளக்கம்...

இந்திய-சீன எல்லையில் நிலவும் பிரச்சனை தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களிடம் முப்படை தலைமை தளபதி, ராணுவ தளபதி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

சீன எல்லையில் பிரச்சனை... முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களிடம் முப்படை தளபதிகள் விளக்கம்...

டெல்லியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் அந்தோணி, சரத்பவார் ஆகியோருடன், தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவனே ஆகியோர், இந்திய-சீன எல்லையில் நிலவும் பிரச்சனை குறித்து விளக்கம் அளித்தனர்.

எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து சரத்பவார், அந்தோணி ஆகியோர் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு, பிபின் ராவத் மற்றும் நரவனே விளக்கம் அளித்ததாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. வரும் 19-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.