நெடுஞ்சாலை கட்டுமானப் பணியின் போது இடிந்து விழுந்த சுரங்கம்..! 6 பேரின் கதி என்ன ?

நெடுஞ்சாலை கட்டுமானப் பணியின் போது இடிந்து விழுந்த சுரங்கம்..! 6 பேரின் கதி என்ன ?

ஜம்மு காஷ்மீரில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரம்பான் மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப் பணியில் வழக்கம் போல ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்து நிகழ்ந்த பகுதியை பார்வையிட்ட ரம்பான் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் , மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.