கர்நாடகா தொழில் துறை அமைச்சர் டுவிட்டர் கணக்கு முடக்கம்.!!

கர்நாடக மாநில தொழில் துறை அமைச்சர் முருகேஷ் நிரானியின் டுவிட்டர் கணக்கை, மர்ம நபர்கள் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா தொழில் துறை அமைச்சர் டுவிட்டர் கணக்கு முடக்கம்.!!

கர்நாடக மாநில தொழில் துறை அமைச்சர் முருகேஷ் நிரானியின் டுவிட்டர் கணக்கை, மர்ம நபர்கள் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவரது அலுவலகத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அவரது டுவிட்டர் கணக்கை, மர்ம நபர்கள் வெளிநாட்டிலிருந்து முடக்கியுள்ளதாகவும், அதில் இருந்து பதிவிடப்படும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பொது மக்கள் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்துக்கும், போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அவரது முகநூல் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள், பலரிடம் பணம் கேட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.