இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் மத்திய அதிரடி உத்தரவு...

இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் மத்திய அதிரடி உத்தரவு...

 இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டின் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திய இந்தியர்கள் இங்கிலாந்து பயணிக்கும் போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாக கருதப்பட்டு கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்த போதிலும் இதுவரை இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதல் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.