மஹந்த் நரேந்திர கிரி தற்கொலையின் வீடியோ பதிவு - போலீசாரிடம் சிக்கியது

உத்தரப்பிரதேசத்தில் அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவரும், மடாதிபதியுமான மஹந்த் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்டது வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹந்த் நரேந்திர கிரி தற்கொலையின் வீடியோ பதிவு - போலீசாரிடம் சிக்கியது

மஹந்த் நரேந்திர கிரி தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக, மடாதிபதியின் சீடர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மடாதிபதியின் சடலத்தை மீட்ட போலீசார், அங்கிருந்து 8 பக்க தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், தனது சீடர்களில் ஒருவரால் ஏற்பட்ட மன அழுத்ததால், தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது.

அக்கடிதத்தின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்  மஹந்த் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்டது வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வீடியோ பதிவு அடங்கிய செல்போன் போலீசாரிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.