விஜய் மல்லையாவின் பங்களா ரூ.52.25 கோடிக்கு விற்பனை..!!!

மும்பையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்குச் சொந்தமான பங்களா 52.25 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவின் பங்களா ரூ.52.25 கோடிக்கு விற்பனை..!!!

வங்குகளில் 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, இங்கிலாந்து தப்பிய தொழிலதிபர் விஜய் மல்லையாவிடமிருந்து கடனை மீட்க அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவ்வாறு கைப்பற்றப்பட்ட மும்பை விமான நிலையம் அருகில் கிங்பிஷர் பங்களாவை 2016ஆம் ஆண்டு ஏலத்தில் விட முயற்சி எடுக்கப்பட்டது.

மும்பை விமான நிலையத்தின் அருகில் இருப்பதால் இந்த இடத்தில் கட்டுமானத்துக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் இந்த இடத்தின் மதிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் ஏலத்தில் நிர்ணயிக்கப்படும் மதிப்புக்கு வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை எனக் கூறப்பட்டது.

இதனால் 8 முறை தோல்வியடைந்து 9-வது முறையாக 52.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை ஹைதராபாத்தைச் சேர்ந்த சாட்டர்ன் ரியல்டர்ஸ் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.