விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட விவகாரம் : யாரையும் அவசரப்பட்டு கைது செய்ய மாட்டோம்: யோகி திட்டவட்டம்...

விவசாயிகளை கார் ஏற்றிகொலை செய்யப்பட்ட வழக்கில் யுகங்கள் அடிப்படையில் நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட விவகாரம் : யாரையும் அவசரப்பட்டு கைது செய்ய மாட்டோம்: யோகி திட்டவட்டம்...

உத்தரப்பிரேதசத்தில் விவசாயிகள் நடத்திய அமைதி போராட்டத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 விவசாயிகள் பரிதபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய நபரான  உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா தலைமறைவாக இருந்து வந்தார். இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், பாரபட்சமின்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தது. உத்தரப் பிரதேச காவல்துறையினரின் நடவடிக்கைக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். 2வது முறையாகவும் அழைப்பாணை அனுப்பப்பட்டதை அடுத்து, லக்கிம்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி ஆஷிஷ் மிஸ்ரா வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆதாரம் இன்றி யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் மீது கார் மோதிய விவகாரத்தில் வீடியோ ஆதாரத்தை யார் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான வீடியோக்களில் காருக்குள் யார் இருந்தது என்பது தெரியவில்லை என்றார்.

ஆதாரமில்லாமல் வெறும் அழுத்தத்தின் பேரில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது. யுகங்கள் அடிப்படையில் நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம் என கூறிய யோகி ஆதித்யநாத்,  குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.